மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலைப்போரில் பெண்கள் - 4

மங்காத வீரம் கொண்ட மணிகர்னிகா



நமது துணைக்கண்டத்தில் நிகழ்ந்த ஆங்கிலேய எதிர்ப்புகளிலேயே சிப்பாய்க் கலகமே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாகையால் அதுவே இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த போராட்டம் ஒருங்கினைக்கப்பட்ட விதமும் திரட்டுதலும் அப்படிபட்டது. ஆயினும் நாடெங்கிலும் அதற்கு முன்பே பல இடங்களிலும் பல்வேறு மன்னர்களிடமிருந்தும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடர்ச்சியான எதிர்ப்புகள்  இருந்துவந்துள்ளன. 1857 இல் வெடித்த சிப்பாய்க் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் ஆங்கிலேயருக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு அதில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் வீழ்ந்தாலும் கூட வெள்ளையைகள் வெள்ளமுடியாதவர்கள் அல்ல என்பதை அவர் நிருபனம் செய்தார். 

அதிலிருந்து தொடங்கி 1772ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வீரமங்கை வேலு நாச்சியார் தலைமையிலும், 1795ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799ஆம் ஆண்டு வீரப்பான்டிய கட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலும் ஆங்கிலேய கடுமையாக எதிர்ப்பு எதிரொலித்தது. பின்னர் 1806ஆம் ஆண்டு திப்புவின் மகன்கள் சிறப்பட்டிருந்த வேலூர் சிறையில் சிப்பாய்க் கலகமாகவும் வெடித்து. இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும். அதன் தொடர்ச்சியாகவே 1857ஆம் ஆண்டு வட இந்தியச் சிப்பாய்க் கலகமாகம் மூண்டெழுந்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது.

இந்தியாவில் வர்த்தக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட பிரித்தானியரின் தொழில் மற்றும் தொழிற்சாலை பகுதிகளை நிருவகிக்க பிரித்தானிய கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆனாலும் இதன் எல்லை மீறிய லாப, ஆதிக்க வெறி நடவடிக்கைகளாலும் இந்திய மன்னர்களிடையே ஓயாமல் நடந்த தகராறுகளாலும், ஒற்றுமையின்மையாலும் 1757 ல் பிளாசி போரில் பெற்ற வெற்றியால் கிழக்கு இந்தியாவில் வங்காளம் வரை அதன் ஆட்சி பரவலாக்கப்பட்டது. அவர்கள் வெற்றிக்கு இந்திய குறுநில அல்லது பெரிய நிலப்பரப்பை ஆண்ட மன்னர்களும் முக்கிய காரணமாய் இருந்தார்கள் என்பது கசப்பான உண்மைதான். பக்சர் போரில் முகலாய பேரரசர் ஷா அலாம்  தோற்றபின் 1764ல் பீகாரும் கிழக்கிந்திய கம்பெனியால் எளிதாக கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக வங்கம், பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களில் வரி வசூல் செய்யும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் விரைவில் மும்பை, சென்னை போன்ற பகுதிகளில் தன்னை விரிவாக்கம் செய்தது. அதாவது இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை தன்வசம் கொண்டது.

ஆங்கில-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கில-மராட்டியப் போர்கள் (1772-1818), கர்நாடகப் போர்கள் ஆகியன பரந்த நர்மதா ஆற்றின் தெற்குப் பகுதியைத் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகுத்தது. அதுவரை இச்செயல்களுக்கு பேரளவில் பெரிய எதிர்ப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

எதிர்ப்பை விதைக்கும் பொறிகள் ஆங்காங்கு வித்தாக கனன்றுக்கொண்டிருந்தன. அப்படி ஒரு நெருப்பு பொறி பிறந்தது. அது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ண் நகரம் அமைக்கப்பட்ட, சார்லஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று தனது உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, அதே 1835 ஆம் ஆண்டில் பிறந்தது. அவ்வாண்டு நவம்பர் 19 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்த வீரத்தின் பெயர் மணிகர்னிகா.

இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது தாயார் பகீரதிபாய் இறந்து போனார். தாயை இழந்த குழந்தை அந்த சோகத்தின் சுவடுகூட தெரியாமல் வளர்ப்பதில் மிகவும் சிரமம் இருந்ததுதான். ஆனால் அவரது தந்தை அந்த சுமையை தன் தோலில் சுமந்து பாசத்துடன் வளர்த்தார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும் வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தை மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா மன்னரின் நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார். வளர்த்தது மட்டுமல்ல அவளது திருமணத்தையும் அப்படியே செய்துவைத்தார்.

ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார் அவரது தந்தை. அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 

1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் உடல்நல குறைவால் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின் சோகம் அவர்களை வாட்டியது, நாடு, நகரம், அதிகாரம், போதுமான அளவு செல்வம் எல்லாம் இருந்தும் சொல்ல முடியாத வெறுமை அவர்களை வாட்டியது. எனவே ராஜா கங்காதர ராவ் நெவல்கரும் இராணி இலட்சுமிபாயும் கலந்து பேசி  ஆனந்த் ராவைத் என்கிற குழந்தையை தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்குத் தங்களுடைய இறந்த குழந்தையான தாமோதர் ராவ் எனற பெயரை சூட்டினர். இருப்பினும் தனது மகனின் இழப்பின் துயரரம் ராஜாவை துரத்திக்கொண்டே இருந்தது. அந்த கொடுந் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல் நலமிழந்து குறைந்து இறந்தார். அது பேரிடியாக ஜான்சிரானியை தாக்கினாலும் அவரது மனஉறுதி மட்டும் குறையவே இல்லை. அவர் மன உறுதியை சோதிக்கும் பல நிகழ்வுகள் இனிதான் நடக்க இருந்தது.

அதே காலத்தில்தான் இந்திய நாடு முழுவது பல மாற்றங்கள் நடந்துவந்தது. அந்நிய ஆட்சியின் மீது கடுமையான கோபம் ஆங்காங்கே மூன்டுக்கொண்டிருந்தது. காரணம் அவர்கள் கொண்டுவந்த கடுமையான சட்டங்கள்தான். ஒருபக்கம் அவர்களது படையில் இந்திய நாட்டு சிப்பாய்களை அதிக அளவு சேர்த்துக்கொண்டே வந்தார்கள். அதிலும் குறிப்பாக இந்திய கிராமங்களில் சாதியின் பெயரால் ஒடுக்கிவைக்கப்பட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டனர். இந்த ராணுவ வாய்ப்பை பெருமையாகவும் ஒருவித விடுதலையாகவும் கருதினர். அது ஒருவிதத்தில் உண்மையும் கூட இதுகுறித்து பின்னர் பார்க்கலாம். ஆங்கிலேயரின் படை விஸ்தரிப்பு அவர்களது ஆட்சியை இங்கு முழுமையாக நிறுவிட உதப்வியது. அதே நேரம் அவர்களுக்கான எதிர்ப்பும் இதனாலேயே அதிகரித்ததையும் மனதில் வைப்போம். இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காதுதனே!  

இந்த சம்பவங்களூடாக மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், தங்களின் வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுனர் டல்லவுசி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை ஆட்சியின் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். இப்படி பல இடங்களில் செய்தும் இருந்தனர். இது அவரகளது செல்வாக்கு விரவில் பல இடங்களுக்கு பரவ வழிவகை செய்தது. தங்களது அடகுமுறையை மிகவும் இயல்பாக செய்தனர். ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஜான்சிராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஒன்று பனத்துடன் ஓய்வெடு அல்லது நாட்டைவிட்டு வெளியேறு இதுதான் அவர்கள் கொடுத்த வாய்ப்பு. இரண்டில் ஒன்றல்ல, ஒன்றில் ஒன்றை தேர்ந்தெடு. ஜான்சி ராணி தனது வாழ்வில் முக்கியமான சவாலை சந்திக்கும் காலக்கட்டதில் இருந்தார். பெண்தானே எளிதில் அடக்கிவிடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நிற்க எழ வேண்டிய கட்டாயத்தி இருந்தார்.

அப்போது ஆங்கிலேயர்கள் செய்த செயலே அவர்களுக்கு எதிராக எழுத்தது. இந்தியாவில் எழுந்த கிளச்சிகளை இந்தியர்களை வைத்தே அடக்குவது என்ற தந்திரம் எப்போதும் பலிக்காது என்பது மிக விரைவில்  நிருபணம் ஆனது. ஆம் இந்தியாவில் உள்ள இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராய் திரளும் காலம் வந்தது. அது ஜான்சி ராணியின் ஆட்சிக்கும், பல மன்னரகளை ஒன்று திரட்டவும், மன்னகள் மூலமாக மக்கள் திரளை திரட்டவும் பயன்பட்டது. இனிதான் ஜான்சியின் போர்களம் துவங்கியது.  
(போராட்டம் தொடரும்)


0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark