மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


உலகில் தோன்றிய மாமனிதர்கள் தங்களுடைய இருப்புக்கு பின்னால் தங்கள் அடையாளங்களினூடாக வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தங்கள் குழுக்களுக்கான அடையாளமாய் மாற்றிக்கொள்ள பலர் தொடர் முயற்சியர்சிகளை மேற்கொண்டாலும் அவர்களது மேதமை அதையும் தாண்டி சமூகம் முழுமைக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது.

அத்தகைய ஆளுமைகளில் அம்பேத்கர் ஒரு மகத்தான இடத்தை பிடித்தவராவார். அவர் சமூகத்தில் பல தளங்களில் தன்னுடைய பங்களிப்பை செய்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தினமும் 18 மணி நேரம் பயின்று 1916ல் எம்.ஏ பட்டம் பெற்றவர். நியூயார்க் நகரில் 2000 புத்த்கங்களை வாங்கியவர். லண்டன் மியூசியத்தில் காலையில் நுழைந்து இரவு காவலர் வந்து கூறுகிறவரை படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இப்படியாக அவரது பரிமாணங்களை சொல்லிக்கொண்டே போகலம் ஆனால் அவர் இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாக தள்ளிவைக்கப்பட்ட பெருந்திரள் சமூகத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த மாமேதையாவார்.

அந்த மக்கத்தான மனிதனின் கல்விச் சிந்தனைகள் கல்வியை நேசிக்கும் அனைவரும் உள்வாங்க வேண்டிய கருத்து பெட்டகங்களாகும். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மறைந்த அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் அனுபவத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியின் அவசியத்தை கண்டுணர்ந்தார். ஆரம்ப கல்வியில் அவர் வயதையத்த குழந்தைகள் கையில் புத்த்கங்களையும், உணவு பைகளையும் சுமந்து வந்த போது அவர் கூடுதலக சாக்கு பையையும் சுமந்து வந்தார். இன்னும் பிற அவலங்கள் அவர் வாழ்க்கையில் கடுமையான உறுதியை கொண்டு வந்தது. விடாப்பிடியுடன் கற்றலின் உச்சிக்கு சென்றார்.

தான் மட்டும் கல்வி பெற்றால் போதாது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அது கிடைத்திட தனது சொந்த முயற்சியால் அவர்களுக்கான கல்வி நிலையங்களை துவக்கினார். 1924 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி மும்பை தாமோதர் ஹாலில் நடந்த கூட்டத்தில் "பஹிஷ்க்ரித் ஹித்காரினி சபா" என்ற அமைப்பை உருவாகினார். விடுதிகள், நூலகங்கள், படிப்பு வட்டங்கள் ஆகியவைகளை தனது நோக்கமாக இந்த அமைப்பு அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் ஷோலாப்பூருக்கு அருகில் இலவச விடுதி ஒன்று கட்டப்பட்டது. பைகுல்லா என்ற இடத்தில் நூலகம் ஒன்றையும், மாணவர்களுக்காக "வித்யா விலாஸ்" என்ற மாதப்பத்திரிக்கையும் உருவாக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 1928 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அம்பேத்கர் "ஒடுக்கப்பட்டோர் கல்வி கழகம்" என்ற அமைப்பை துவங்கினார். இதன் சார்பில் ஐந்து விடுதிகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 1945 ஆம் ஆண்டு "பீப்பிள்ஸ் எஜுகேஷ்ன் சொஸைட்டி" என்ற அமைப்பை உருவாக்கினார். தானே முன் நின்று பதினைந்து லட்சம் செலவில் (அரசின் உதவி 6 லட்சம்) ஒரு கல்லூரியை உருவாக்கினார். இந்த அமைப்பு இப்போது ஆல்போல் தழைத்துள்ளது. இப்போது ஒன்பது உயர்நிலைப் பள்ளிகளும், பொறியியல் கல்லூரி. சட்டக் கல்லூரி உட்பட பதினான்கு கல்லூரிகளையும், மூன்று விடுதிகளும் ஒரு தொழிற்பயிற்ச்சிக் கல்லூரியும் நடத்தப்படுகிறது. 

சைமன் கமிஷன் இந்தியா வந்த போது, 1813 முதல் பிரிடிஷ் அரசாங்கம் இந்தியாவில் கடைபிடித்த கல்வி கொள்கையை அவர் ஆராய்ந்து கொடுத்த மனு மிகவும் புகழ்பெற்ற மனுவாகும். இந்திய கல்வியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஹன்டர் கமிஷன் புள்ளி விபரங்களை அவர் மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி அந்த அறிக்கையை தயாரித்து இருந்தார். அதே போல அவர் 1920 களில் பம்பாய் மாகாண் சட்ட மேலவை விவாதங்களில் கலந்துக்கொண்டு பேசிய பேச்சுக்கள் அவரது கல்வி மீதான அக்கறையை காட்டும்.

வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் அளிக்காது. அது சாதி இந்துக்களுக்கே பயன்படவில்லை. ஆக விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் கற்றபதுதான் பயன்தரும். ஆனால் இதை கற்பதற்கான கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும். இது அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே அரசு உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை என அவர் வாதாடினார்.  

கல்வி அரசின் கையில் இருக்கவேண்டும் என அவர் விடாபிடியாக இருந்த காரணம் அப்போதுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொஞ்சமேனும் கல்வி கிடைக்கும் என உறுதியா நம்பினார். அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆனால் இந்திய சாதி அமைப்பை கலைக்க அல்லது சீர்குலைக்க விரும்பாத ஆங்கிலேயர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை.   

இதற்கு சிறந்த உதாரணத்தை அவர் சைமன் கமிஷனுக்கு கொடுத்த் அறிக்கையிலிருந்து பார்க்கலாம்..

"இப்போது நாம் நமது கவனத்தை ஓர் உண்மையின்பால் செலுத்த வேண்டும்; இதுவரை நாம் பெரிதும் அலட்சியப்படுத்தி வந்த உண்மை அது; இதனை நாம் ஒப்புக் கொள்ளதான் வேண்டும்; அந்த அசைக்க, மறுக்க முடியாத உண்மை இதுதான்; வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் பெரிது உகந்ததான, பயனுள்ள, நடைமுறைக்கு ஏற்ற கல்வி அறிவை மிகப்பெரும் திரளான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது மிக மிக அவசியம்; எத்தகைய கல்வியையும் தங்களது முயற்சியினால் கிடைக்கப் பெற இயலாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் இருந்து வருகிறார்கள்" என 1854 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி இந்திய மக்களுக்கு கல்வியை கொடுக்க பிரிடிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது உண்மையா என அவர் கேட்டார். அப்படி இந்த கவலை உண்மையெனில் இது யாருகான கவலை? சாதி இந்துக்களுக்கும் பிறருக்குமா? அப்படியெனில் தலித்துக்கள் உங்களுக்கு சுமையா? என மறைமுகமாக கேட்டார்.

இவைகளை ஆதாரங்களுடன் அடுக்கினார்...

1881- 82 கல்வியாண்டை அய்வு செய்து அவர் கணக்கிட்டார். அப்போது தொடக்க கல்வி பயின்றவரகள் மொத்தம் 3,15,635 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.87 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 2,862 பேர் மட்டுமே. (பிராமணர்கள் 20.17 சதம்.)

அப்போது நடுநிலைப் பளிகளில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 11,254 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.14 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் 17 பேர் மட்டுமே. (பிரமணர்கள் 30.70 சதம்.)

அப்போது உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவரக்ள் மொத்தம் 4959 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள் 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் ஒருவர்கூட இல்லை. (பிரமணர்கள் 40.79 சதம்.)

அப்போது கல்லூரியில் பயின்றவரக்ள் மொத்தம் 480 பேர். கிறித்தவர்கள், பிராமணர்கள், இதர இந்துக்கள், முகமதியரக்ள், பார்சிகள், ஆதிவாசிகளும் மலைசாதியினரும், கீழ்சாதி இந்துக்கள், யூதர்களும் ஏனையோரும் என பட்டியல் இட்டதில் தலித்துக்கள், 0.00 சதவிதமே படித்தனர். அதாவது இந்த மொத்த எண்ணிக்கையில் எவரும் இல்லை. (பிரமணர்கள் 50.05 சதம்.)

ஆக பிரிடிஷ்காரர்கள் இவைகளை கவனிக்க வேண்டுமென கூறினார். அவரது கொள்கை ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுப்பதும், அவர்களை வாழ்க்கையில் முன்னேற்றுவதும் என இருந்த காரணத்தினால் தனது வாழ்வியல் அனுபவ அடிப்படையில் சாதி இந்துக்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்போதும் அடக்கியே வைத்திருப்பார்கள் என்ற உண்மையை கண்டுணர்ந்தார். 

இன்றும் அதுதான் நடக்கிறது. அறிவு ஜீவிகளாக தங்களை புறிந்துக் கொள்கிற ஐ.ஐ.டி "டுபாக்கூர்கள்" முதல் மதிப்பெண் பெறும் தலித் மாணவனை கோட்டா அடிப்படையில் தள்ளிவைத்து, அவர்கள் இடத்தை பரித்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் அன்றைய கல்வியை, சமூக நிலைகளை ஆய்வு செய்த அம்பேத்கர் போல இன்றைய கல்வியையும், சமூகத்தையும் நாம் ஆய்வு செய்யவேண்டுமா இல்லையா?  அவரது நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியை ஏன் ஒரு துவக்கமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?! 

ஆகவே கனவான்களே! இனி அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சிகள் தேவையா? இல்லையா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark